திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பல்வேறு விதமான சோதனைகளும் அதன் பயன்களும்

இறைவன் தனக்கென வடிவமைத்துள்ள வழிமுறைகளுக்கு அமைவாகவே இந்த உலகின் அனைத்து செயற்பாடுகளையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான். அந்த வகையில் மனிதர்களை மாறி மாறி பல்வேறு முறைகளில் சோதிப்பதும் அவனின் வழிமுறையாகும். இந்த உலகில் மனிதர்கள் நிம்மதி, சந்தோசம், பிரச்சினைகள், சிக்கல்கள் என என்னிலையில் வாழ்ந்தாலும் அனைவரும் அவரவருக்கென இறைவன் விதித்தபடி சோதிக்கப் படுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே ஏழ்மை, கஷ்டம் மற்றும்  நோயில் வாழ்கிற ஒருவரும் செல்வ செளிப்புடன் ஆரோக்கியமாக வாழும் ஒருவரும் முறையே சோதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்விருவரிடையே இவ்வாறான நிலைமைகளை மாறி மாறி வரச் செய்வதும் இறைவனின் வழிமுறையாகும். சிலருக்கு இறைவன் குடும்பம் குழந்தைகளை கொடுத்தும் சோதிப்பான், சிலரை தனிமை படுத்தியும் சோதிப்பான். ஆக இந்த உலக வாழ்க்கை முழுவதும் சோதனைக்கான காலமாகும். இந்த உண்மைகளையே பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 21:35)
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் – அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல் குர்ஆன் 64:15)
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் குர்ஆன் 2:155(  
இந்த உலகையும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் மனிதர்களுக்காக படைத்த இறைவன் இவ்வாறு அவன் மனிதர்களை சோதிப்பதிலும் பல   நன்மைகளை அவர்களுக்காக ஏற்படுத்தி வைத்துள்ளான். அதனை அவ்வப்போது அவர்கள் புரிந்து கொள்ளாத போதும் எதிர் காலத்தில்  தெளிவு பெற வாய்ப்புள்ளது. பல்வேறு சந்தர்பங்களில் எத்தனையோ உபதேசங்கள், போதனைகள்  மூலம் ஏற்படாத தாக்கங்கள், மாற்றங்கள், படிப்பினைகள், தெளிவுகளை எல்லாம் ஓரிரு சோதனைகள், கஷ்டங்கள் மூலம் மனிதர்கள் அடைந்து கொள்வதை எமது வாழ்வில் காண்கிறோம். அவ்வாறு ஏற்படும் சில சோதனைகள் மற்றும் அதன் மூலம் மனிதர்கள் பெரும் பயன்களை பின்வருமாறு இஸ்லாம் தெளிவு படுத்துகிறது.
மனிதர்கள் உணர்ந்து திருந்துவதற்கான சோதனை 
மனிதர்கள் இறைவனை மறந்து, அவனின் கட்டளைகளை துறந்து வாழும் போது அவர்கள் உணர்வு பெற்று, இறைவனை ஞாபகப் படுத்தி, அவனின் பால் பணிந்து மீண்டு வருவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான் என்ற செய்தியை பின்வரும் இறைவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல் குர்ஆன்  30:41)  
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல் குர்ஆன்  7:94(
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு. (அல் குர்ஆன்  6:42)
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கிறார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் – அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம். (அல் குர்ஆன் 7:168)
இப்படியாக இறைவன் சோதனைகளை இறக்கியும் உணர்வு பெற்று திருந்தாதவர்களுக்கு உலகின் சில இன்பங்களை அனுபவிக்கச் செய்து விட்டு பிறகு தண்டனையை இறக்கி அவர்களை வேரறுத்து விடுகிறான் என்ற உண்மையை இறைவன் எமக்கு பின்வருமாறு புரிய வைக்கின்றான்.
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான். (அல் குர்ஆன்  6:43)
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன்  6:44)
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.” (அல் குர்ஆன்  6:45)
இதே அடிப்படையில் தான் தன்னை முற்றிலும் நிராகரித்து வாழ்கிறவர்களுக்கு இறைவன் உலக பாக்கியங்களை வழங்குகிறான். இதனைப் பார்த்து உண்மை விசுவாசிகளான நாம் ஏமார்ந்து விடக் கூடாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நிராகரிப்பாளன் ஏதேனும் ஒரு நனமையை செய்தால், அதன் பிரதி பலனை அவனுக்கு உலகிலேயே அல்லாஹ் கொடுத்து விடுகிறான். அதே நேரத்தில் ஒரு முஃமின் செய்யும் நன்மைகளுக்கான பலனை மறுமைக்காக இறைவன் சேமித்து வைக்கின்றான். மேலும் இவ்வுலகிலே அந்த முஃமினுக்காக இறைவன் அவனை வழிப்படுவதற்கான வாழ்வாதாரத்தையும் (றிஸ்க்) வழங்குகிறான். (முஸ்லிம்)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதொரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.
(அறிவிப்வர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி).
உண்மையாளர்களையும் பொய்யர்களையும் பிரித்தரிவதற்கான சோதனை   
இறை விசுவாசியைப் போன்று  நமது நண்பர்களாக நேர்மையான வர்களாக நடித்துக் கொண்டு உள்ளத்தில் நயவஞ்சகத்தையும், குரோதத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு எம்முடன் ஒன்றர கலந்து வாழ்கிற எத்தைனையோ எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமக்குள் மறைத்து வைத்திருக்கும் விஷத்தை கக்கி முஸ்லிம்களை அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவர்களின் முகத்திரைகளை களைந்து அவர்களின் உண்மை முகத்தை அம்பலப் படுத்துவதற்காகவும் இறைவன் மனிதர்களை சோதிப்பான். இதன் மூலம் உண்மையான இறைவிசுவாசி யார்? நயவஞ்சகர்களான இஸ்லாத்தின் எதிரிகள் யார்? என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படியான கயவர்களை எத்தனையோ சோதனைகள், பிரச்சினைகளின் போது தான்  நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.  இதனையே பின்வருமாறு அல் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது :
 “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான். (அல் குர்ஆன்  29: 2,3 )
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு. (அல் குர்ஆன்  3:179)
நல்லடியார்களை தூய்மைப் படுத்தி  உயர்வைப் பெற்றுத் தருவதற்கான சோதனை 
இறைவனின் அன்பிற்குரிய நல்லடியார்களை அவர்களின் பாவங்களை மன்னித்து தூய்மைப் படுத்தி அவர்களுக்கு மேலதிக அந்தஸ்தத்தையும், உயர்வையும் பெற்றுக் கொடுத்து மனித புனிதர்களாக மாற்றுவதற்காகவும் இறைவன் சோதிப்பான். இவர்கள்  மற்றவர்களை விடவும் சற்று அதிகமாகவே சோதிக்கப் படுவார்கள். இந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை தமது வாழ்வு நெறியாக ஏற்று அதனை முழுமையாக பின்பற்றி வருகிற உண்மை முஸ்லிம்கள் சோதிக்கப் படுகின்றார்கள். இவர்கள் ஏனையோரை விடவும் அதிகமான சவால்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவது கண்கூடானதாகும்.  இவ்வாறான சோதனைகளின் போது அல்லாஹ்வுக்கு முற்றிலும் அஞ்சி மேலும் தமது ஈமானைப் பலப் படுத்திக் கொண்டு  பொறுமையை கடைப் பிடித்து வாழும் போது இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு  உன்னத அந்தஸ்தத்தையும், உயரிய நன்மைகளையும் பெற்றுக் கொடுக்கின்றான்.  இந்த விபரங்களையே பின்வரும் திரு வசனம், மற்றும் செய்திகள் உணர்த்துகிறன.
 (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல் குர்ஆன்  3:186)
இறைவன் யார் மீது நலவை நாடுகிறானோ அவரை (பல வழிகளிலும்) சோதிப்பான் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரழி), நூல்: புகாரி)  
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் “யா ரசூலல்லாஹ்! மனிதர்களில் அதிகம் சோதிக்கப் படுகிறவர்கள் யார்?” என வினவினேன். அதற்கு அவர்கள்: “நபி மார்கள், அதற்கு பிறகு அடுத்தடுத்த அந்தஸ்தில் உள்ளவர்கள், ஒவ்வொருவரும் அவர்களின் மார்க்க பற்றுதலுக்கு அமைவாகவே சோதிக்கப் படுவார்கள். ஒருவர் மார்கத்தை திடமாக பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் கடுமையாக அமையும். அதே போன்று ஒருவர் சாதரணமாக மார்கத்தை பின்பற்றுகிறார் என்றால் அவரின் சோதனையும் இலகுவாக அமையும். மேலும் அந்த நல்லடியார்  எந்த பாவங்களும் அற்ற நிலையில் பூமியில் நடந்து செல்லும் வரை அவர் இவ்வாறு சோதிக்கப் பட்டுக் கொண்டே இருப்பார்.”  என பதிலளித்தார்கள். (திர்மிதி)
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
என நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். (நூல்: புகாரி)  
சோதனைகளில் பொறுமை காப்பதென்பது சோதனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தம்மைத்தாமே ஆளாக்கிக் கொள்வதையோ, அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொல்லாமல் இருப்பதையோ குறிக்காது. சிக்கல்கள் வரும் என்ற நிலை இருக்கும் போது முடியுமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதோடு, அது ஏற்பட்டு விட்ட நிலையில் அதிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இஸ்லாம் கூறும் முறையான அணுகுமுறைகளை கையாள்வதும் அவசியமாகும். உதாரணமாக நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ முயற்சிக்க வேண்டும். அதனையும் மீறி நோய்கள் ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சைப் பெறுவதும் அதன் மூலம் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு  அதற்கான நன்மைகளை இறைவனிடம் எதிர்பார்த்து நிற்பதும் அவசியமாகும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

எப்போது லைலத்துல் கத்ர்?


லைலத்துல் கத்ர் இரவு எது?என்பதில் இமாம்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.சுமார் 40 கருத்துக்கு மேல் உள்ளதாக இப்னுஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.ஆனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு இதுதான் லைல த்துல் கத்ர் என்று சொல்பவர்களும் உண்டு.

ஜும்ஹூர்கள் எனும் பெரும்பான்மை உலமாக்கள்,மற்றும் இமாம்களின் கருத்து 27 ம் இரவு என்பதே!அதை அடிப்படையாக கொண்டே அன்றைய இரவில் திருக்குர்ஆன் கதம் செய்யும் வழக்கம் உள்ளது.

ரமலானின் அனைத்து இரவுகளையும் பாக்கியமாக கருதி அமல் செய்யவேண்டுமென்ற முன் வஸிய்யத்தை கூறிய பின்னர், கத்ர் இரவு குறித்து மூன்று முக்கிய முன்னனி ஸஹாபாக்களின் கருத்தை மட்டும் கொஞ்சம் செவி தாழ்த்தி கேளுங்கள்.ஏனெனில் கத்ர் இரவில் அமல்செய்பவர் இது கத்ர் இரவுதான் என்ற நம்பிக்கையுடன் அமல்செய்யவேண்டும்.

مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

கத்ருடைய இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை நாடியும் இரவு நின்று வணக்கம் செய்தால் அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படும்.

முதலாவது:இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் கருத்து.

عن زر بْنَ حُبَيْشٍ قال : سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ : إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمْ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ ؟ فَقَالَ رَحِمَهُ اللَّهُ : أَرَادَ أَنْ لا يَتَّكِلَ النَّاسُ ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ ، وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، ثُمَّ حَلَفَ لا يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ، فَقُلْتُ : بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ ؟ قَالَ : بِالْعَلامَةِ أَوْ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لا شُعَاعَ لَهَا

ஸிர் இப்னு ஹுபைஷ் ரஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் உபையிப்னு கஃப் ரலி அவர்களிடம்,உங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத் வருடம் முழுவதும் இரவு நின்று வணங்கினால்தான் கத்ர் இரவு கிடைக்கும் என்று கூறுகிறாரே என கூறினேன்.
அதற்கு உபை ரலி அவர்கள்,அல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்.மக்கள் அமல் செய்வதில் சோம்பேறித்தனமாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினார்.
லைலத்துல் கத்ர் ரமலானில் இருக்கிறது.கடைசி பத்து இரவுகளில் இருக்கிறது.அது 27 ம் இரவு என்பதும் அவர்களுக்கு உறுதியாக தெரியும்.
சத்தியமாக அது 27 ம் இரவு தான் என்று மிகவும் உறுதியாக உபை இப்னு கஃப் ரலி அவர்கள் கூறினார்கள்.
எந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு உறுதியாக சொல்கிறீர் என நான் கேட்டேன்.அதற்கு அன்றைய தினம் சூரியன் சுடரின்றி உதயமாகும் என நபி ஸல் அவர்கள் எங்களுக்கு கூறினார்கள் என உபை ரலி அவர்கள் கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வளவு உறுதியாக சொல்கிற உபை இப்னு கஃப் ரலி அவர்கள் யார் தெரியுமா?
இவரின் இல்முக்கு நபி ஸல் அவர்கள் வாழ்த்துச்சொன்னார்கள்.
பைய்யினா என்ற அத்தியாயம் இறக்கப்பட்ட போது உபையிக்கு அந்த சூரா வை ஓதிக்காட்டச்சொல்லி நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்ட தாக ஹதீஸில் வருகிறது.

இரண்டாவது:இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கருத்து:

قَالَ اِبْن عَبَّاس : دَعَا عُمَر أَصْحَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ عَنْ لَيْلَة الْقَدْر , فَأَجْمَعُوا عَلَى أَنَّهَا الْعَشْر الأَوَاخِر , قَالَ اِبْن عَبَّاس : فَقُلْت لِعُمَر إِنِّي لأَعْلَمُ - أَوْ أَظُنُّ - أَيَّ لَيْلَةٍ هِيَ , قَالَ عُمَر : أَيُّ لَيْلَةٍ هِيَ ؟ فَقُلْت : سَابِعَةٌ تَمْضِي أَوْ سَابِعَة تَبْقَى مِنْ الْعَشْر الأَوَاخِر , فَقَالَ : مِنْ أَيْنَ عَلِمْت ذَلِكَ ؟ قُلْت خَلَقَ اللَّه سَبْعَ سَمَوَاتٍ وَسَبْع أَرْضِينَ وَسَبْعَة أَيَّام وَالدَّهْر يَدُور فِي سَبْع وَالإِنْسَان خُلِقَ مِنْ سَبْع وَيَأْكُل مِنْ سَبْع وَيَسْجُدُ عَلَى سَبْع وَالطَّوَاف وَالْجِمَار وَأَشْيَاء ذَكَرَهَا , فَقَالَ عُمَر : لَقَدْ فَطِنْت لأَمْرٍ مَا فَطِنَّا لَهُ ))
وأخرج هذه القصة إِسْحَاق بْن رَاهْوَيْهِ فِي مُسْنَده وَالْحَاكِم وفيها : (( فَقَالَ عُمَر أَعْجَزْتُمْ أَنْ تَكُونُوا مِثْلَ هَذَا الْغُلامِ الَّذِي مَا اِسْتَوَتْ شُؤُونُ رَأْسِهِ

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
உமர் ரலி அவர்கள் ஸஹாபாக்களை ஒன்று கூட்டி லைலத்துல் கத்ர் இரவு எது?என வினவினார்கள்.அதற்கு அத்துனை ஸஹாபாக்களும் இறுதிபத்தில் உள்ளது என்று கூறி நிறுத்திக்கொண்டனர்.
உடனே நான் உமர் ரலி அவர்களிடம் அது எந்த இரவு என்று எனக்கு தெரியும் என்று கூறியபோது,அது எந்த இரவு?என கேட்டார்கள்.அதற்கு நான்
கடைசி பத்தில் உள்ள 7 வது (அதாவது 27 ம்) இரவு என்று கூறினேன்.
எதை அடிப்படையாக வைத்து இதை கூறுகிறாய் என உமர் ரலி அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.அதற்கு நான் இவ்வாறு பதில் சொன்னேன்.
அல்லாஹ் ஏழு வானங்களை படைத்தான்.ஏழு பூமியையும் படைத்தான்.ஏழு நாட்களை படைத்தான்.காலம் ஏழில் சுழலுகிறது.மனிதன் ஏழு மூலப்பொருட்களால் படைக்கப்பட்டுள்ளான்.பூமியில் ஏழுவையான உணவுவகைகளை அல்லாஹ் கொடுக்கிறான்.ஸஜ்தாவின் உறுப்புக்களும் ஏழுதான்.தவாபும் ஹஜ்ஜில் கல் எறிவதும் ஏழுதான்.
நான் இதை கூறியபோது உமர் ரலி அவர்கள் நீங்கள் இந்த சிற்வர் அளவுக்கு சிந்திக்கவில்லையே?என்று கூறினார்கள்.
(ஹாகிம்)

மூன்றாவது:இப்னு உமர் ரலி அவர்களின் கருத்து:

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ بِيَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ فَكَأَنِّي لا أُرِيدُ مَكَانًا مِنْ الْجَنَّةِ إِلا طَارَتْ إِلَيْهِ وَرَأَيْتُ كَأَنَّ اثْنَيْنِ أَتَيَانِي أَرَادَا أَنْ يَذْهَبَا بِي إِلَى النَّارِ فَتَلَقَّاهُمَا مَلَكٌ فَقَالَ لَمْ تُرَعْ خَلِّيَا عَنْهُ فَقَصَّتْ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى رُؤْيَايَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَكَانَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي مِنْ اللَّيْلِ وَكَانُوا لا يَزَالُونَ يَقُصُّونَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّؤْيَا أَنَّهَا فِي اللَّيْلَةِ السَّابِعَةِ مِنْ الْعَشْرِ الأَوَاخِرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا مِنْ الْعَشْرِ الأَوَاخِر ِ

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து 'இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் 'பயப்படாதீர்!' என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்" என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாம் விட்டேன்.
நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர் இரவு இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவைப் போல் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாள்களில்தான் அமைந்துள்ளது. லைலத்துல் கத்ர் இரவை அடைய முயல்கிறவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.
(புகாரி)

முப்பெரும் மூத்த ஸஹாபிகளான அப்துல்லாக்கள் ரலி அவர்களின் கருத்து கத்ர் இரவை தெரிந்துகொள்ள போதுமானது.
சரி! கத்ர் இரவை தெரிந்த பின்பு இனி அந்த இரவில் என்ன செய்ய வேண்டும்?

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ : قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا ؟ قَالَ : قُولِي اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

லைலத்துல் கத்ர் இரவை நான் அறிந்துகொண்டால் என்ன ஓத வேண்டும்?   என ஆயிஷா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது-
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي யா அல்லாஹ்!நீ மன்னிப்பவன்.கண்ணியமானவன். மன்னிப்பதை நேசிக்கிறாய்,எனவே என்னை மன்னித்து விடுவாயாக ஆமீன்!
(திர்மிதி)
இந்த ஹதீஸை கொஞ்சம் உற்று நோக்கி கவனியுங்கள்.கத்ர் உடைய இரவில் செய்ய வேண்டிய பிரதான அமல் துஆ என்பதை நபி ஸல் அவர்கள் அழகாக கூறுகிறார்கள்.
துஆ வணக்கங்களின் மூலை:
இந்த இரவில் அல்லாஹ்வுடன் உள்ள நம் முனாஜாத்தை தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

துஆ என்பது ஒரு இபாதத்.

நாம் செய்யும் துஆ கபூல் ஆகிறது,அல்லது இல்லை அதை தாண்டி அது ஒரு தனி வணக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நபி சல் அவர்களுக்கு பல துஆக்கள் உலகில் கபூலாகவில்லை என்பதை நாம் அறிந்த செய்தியே!
நான் என் ரப்பிடம் மூன்று துஆ கேட்டேன்.இரண்டை தந்தான், ஒன்றை மறுத்துவிட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பிர்அவ்னுக்கு எதிராக நபி மூஸா அலை அவர்கள்கேட்ட துஆ 40 ஆண்டுக்கு பின்னே கபூலானது.
துஆவின் அங்கீகாரம் மறுக்கப்படுவதும் தாமிதமாகுவதும் துஆவின் மீது நமக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக்கூடாது.
துஆ கபூலாகும் ஒழுங்குகளை கவனத்துடன் பேண வேண்டும்.
அல்லாஹ்விடம் கவனத்துடன் கேட்கவேண்டும்.கவனக்குறைவான உள்ளங்களின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்க்க மாட்டான்.துஆ கபூலாகும் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும்.ஹலால் ஹராமில் பேனுதலை கடைபிடிக்க வேண்டும்.

ஸஃது ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்!என் துஆ  கபூலாக நான் என்ன செய்ய வேண்டும்?என்று கேட்டபோது-
اطب مطعمك உன் உணவை ஹலாலாக்கு என்று உபதேசம் செய்தார்கள்.

துஆ என்பது மகத்தான ஆற்றல் கொண்டது.
நபி இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் நான் உங்களுக்கு கிடைத்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல் அவர்கள் துஆவின் ஒழுங்கை தம் தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்

عن معاذ قال مر النبي صلى الله عليه وسلم على رجل يقول اللهم إني أسألك تمام النعمة قال هل تدري ما تمام النعمة قال تمام النعمة دخول الجنة والفوز من النار

நபி சல் அவர்கள் ஒருவரை கடந்து சென்றார்கள்.அவர் யா அல்லாஹ் பரிபூர்ண நிஃமத்தை உன்னிடம் கேட்கிறேன் என துஆச்செய்தார்.
அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரை அழைத்து பரிபூர்ண நிஃமத் என்றால் என்னவென்று தெரியுமா?என கேட்டார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!எனக்கு தெரியாது,என்ற போது சுவனத்தில் நுழைவதும் நரகிலிருந்து வெற்றிபெறுவதுமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ثم مر على رجل يقول اللهم اني أسألك الصبر قال قد سألت ربك البلاء فسله العافية

இன்னொரு தோழர் யா அல்லாஹ் எனக்கு பொருமையை கொடு என்று துஆச்செய்தார்கள்.அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரிடம்,நீர் உம் ரப்பிடம் சோதனையை கேட்கிறாயா?என்று கண்டித்தார்கள்.அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று கூறினார்கள்.

 اللهم اني اعوذ بك من الفتنة   யா அல்லாஹ் என்னை பித்னாவை விட்டும் பாதுகாப்பாயாக என துஆச்செய்துகொண்டிருந்த ஒருவரை உமர் ரலி அவர்கள் கடந்துசென்றபோது-யா அல்லாஹ் இவர் துஆவை விட்டும் என்னை பாதுகாப்பாயாக என கூறினார்களாம்.
காரணம் கேட்டபோது அல்லாஹ் தன் வான்மறையில் பொருளும் பிள்ளை யும் பித்னா என்று கூறுகிறான்.பொருளும் பிள்ளையும் உனக்கு வேண்டாமா? என விளக்கம் தந்தார்கள்.
நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு துஆவின் மீது அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

دخل رسول الله صلى الله عليه وسلم، ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له: أبو أمامة، فقال يا أبا أمامة: ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله،
قال: أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك؟ قال: قلت بلى يا رسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، قال: ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني
அபூ உமாமா ரலி என்ற நபித்தோழரை பள்ளிவாசலில் கண்ட நபி ஸல் அவர்கள்,த்ழுகை அல்லாத நேரத்தில் இங்கு வர காரணம் என்ன?என கேட்டபோது கடன் சுமையும் கவலையும் என்று  நபி ஸல் அவர்களிடம்  கூறிய போது ஸல் அவர்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த துஆ இது:
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
அதற்கு பிறகு  எனக்கு கடன் பிரச்சனையும் தீர்ந்தது கவலையும் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.
அலி ரலி அவர்கள், அல்லாஹ்வின் கடமையில் குறைவு செய்துவிட்டேன் என்ன செய்யவேண்டும்? என நபியிடம் கேட்டபோது இந்த துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.அந்த துஆ இது:
"اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

காலித் ரலி அவர்கள் நபியிடம் கெட்ட கனவு வருகிறது என முறையிட்ட போது நபி ஸல் அவர்கள் பின்வ்ரும் துஆவை ஓதச்சொன்னார்கள்.
بسم الله أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.