புதன், 4 செப்டம்பர், 2013

துஆக்களின் சிறப்பு ,

அஸ்ஸலாமு  அழைக்கும்.(வரஹ்.....)
 இறைவனிடம்   கை   ஏந்துங்கள்,                                                              
      நாம்  இறைவனின்  தியானத்தை  தவிர  வேறு  எதிலும் மன  அமைதி  காண  முடியாது .
     அல்லாஹ்வை  நினைவு  கூர்வதை  கொண்டுதான்  இதயங்கள்  அமைதி  பெறுகின்றன
      அல்லாஹ்வை  உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே  தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு  மனதோடு  கேட்கப்படும்  துஆ  தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
     அல்லா  கேட்டதையே  கொடுக்கின்றான் . அல்லது அதைவிட  
சிறந்ததை  கொடுக்கின்றான். அல்லது  அந்த  துஆவைக்   கொண்டு வர 
இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
       நாம்  துஆ  செய்யும்போது இரு கைகளையும்  தோல்,புஜம் வரை உயர்த்தி  முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ 
செய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின்  ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் 
தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
        துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்  
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
        அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு 
        அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா 
        வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .  

 சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
  1. பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில்   கேட்கப்படும்  துஆ ,
  2.  பர்ளு  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  3.  தஹஜ்ஜ்த்  தொழுகைக்குப்பின்  கேட்கப்படும்  துஆ 
  4. சஜ்தாவில்   கேட்கப்படும்  துஆ 
  5. நோன்பு   திறக்கும்  முன்   கேட்கப்படும்  துஆ .